தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இழப்பீடு வழங்காத போக்குவரத்துக் கழகம்: பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி! - விவசாயின் இறப்பிற்கு இழப்பூடு வழங்காத போக்குவரத்துக் கழகம்

திண்டுக்கல்: அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழந்ததற்கு இழப்பீடு வழங்காததால் பழனி பேருந்து நிலையத்தில் இருந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

govt bus japti
govt bus japti

By

Published : Jan 10, 2020, 4:53 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த காப்பிளியம்பட்டி கிரமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் (29). இவர், 2016 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்திலிருந்து காப்பிளியம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோவை அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், இதற்கு இழப்பீடு கேட்டு ராமகிருஷ்ணனின் தந்தை பெரியசாமி பழனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6.93 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இன்று வரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இழப்பீடு கொடுக்காத காரணத்தால் வட்டியுடன் சேர்த்து 8.35 லட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு வழங்க வேண்டும். கொடுக்க தவறினால் பேருந்தை ஜப்தி செய்யப்படும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி செழியன் உத்தரவிட்டார்.

ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து

குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு!

இந்நிலையில், போக்குவரத்துக் கழகம் இழப்பீடு தொகையை செலுத்தாத காரணத்தால் பழனி பேருந்து நிலையத்தில் இருந்த கோவை பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details