தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கத்தால் மண்பானை விற்பனை அமோகம்! - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கத்தால் மண்பானை விற்பனை அமோகம்!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கத்தால் மண்பானை விற்பனை அமோகம்!

By

Published : Apr 30, 2021, 10:36 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனல் காற்றும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அதிகரிக்கும் உடற்சூட்டை தணிக்க பழச்சாறு, குளிர்பானங்கள் பருகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெயில் காலத்தை கருத்தில் கொண்டு குழாய் பொருத்தப்பட்ட மண்பானை கூஜா, ஜாடி, பானைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி பைபாஸ் ரோடு, நொச்சி ஓடைப்பட்டி, கூலம்பட்டி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பானை கடைகளில் விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதில் எட்டு , பத்து, பதினைந்து லிட்டர் கொள்ளளவு என்ற வெவ்வேறு அளவுகளில் பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. பானைகளின் விலை ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது.

இதையும் படிங்க : கரோனாவால் உயிரிழந்த தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த மகள்கள்

ABOUT THE AUTHOR

...view details