திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி சந்தைக்கு எதிரே உள்ள கோட்டை குளம் சாலையில், கடைகள் அமைத்து வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து, கோட்டை குளம் சாலையில் செயல்பட்டுவந்த காந்தி காய்கறி சந்தை, பழனி புறவழிச்சாலைக்கு மாற்றப்பட்டது.
தர்ணா போராட்டம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனையடுத்து காய்கறி சில்லறை வியாபாரிகள், கோட்டை குளம் சாலையில் இன்று (ஜூன்.08) தற்காலிகமாகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.