திண்டுக்கல்: எருமைகார தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். மணிகண்டன் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். மேலும், திண்டுக்கல்லில் தனது தந்தை ஜெயமுருகன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையையும் கவனித்துவந்தார்.
மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், பர்னிச்சர் கடையை மணிகண்டனின் மனைவி கற்பகம் கவனித்து வந்துள்ளார். சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் மணிகண்டன் திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று (ஆகஸ்ட் 07) மாலை தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த மணிகண்டன் தனது பர்னிச்சர் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, மனைவி கற்பகம் தனது மகனை தந்தையிடம் விட்டு விட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கடைக்குள் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்ட தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்சியடைந்த அவரது மகன் கூச்சலிட்டவாறு கடையின் வெளியே சென்றுவிட்டார்.
காவல் துறை விசாரணை