தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் உயிரிழப்பு - madurai latest news

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பழனி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மதுரையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன்

By

Published : Jun 11, 2021, 2:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த அன்பழகன். இவரது, தந்தை நெல்லை மாறன்; திமுக தலைமைக் கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தவர். அன்பழகனின் மனைவி பேபி பொன்மணி (65). பேபி பொன்மணி ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை ஆவார்.

இத்தம்பதியினருக்கு எஸ்தர் ஜானிகா என்ற மகள் உள்ளார். இவரது, சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் ஆகும். இந்திய காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் அன்பழகன். பின்னர், தனது பணியை கடந்த 2006ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு, பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன்

இவர், கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (ஜூன்.11) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனின் உடல், அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் பேரையூரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க : கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - அமைச்சகத்தின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details