திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (33). இவரது மனைவி நாகலட்சுமி (24). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
கணவன் - மனைவி தகராறு
இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்தார் மணிகண்டபிரபு. பின்னர் நாகலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி 500 ரூபாய் பெற்றுக்கொண்டு, மீண்டும் மது அருந்திவிட்டு நாகலட்சுமியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது மணிகண்டன், நாகலட்சுமியை தாக்க முயன்றபோது அவர் தப்பிச்சென்றதால், அருகில் தொட்டியில் இருந்த பெண் சிசுவை வீட்டின் சுவற்றில் அடித்துக் கொலை செய்தார்.
இதனிடையே, நாகலட்சுமிக்கு திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம செவிலியர் அமரா என்பவர் வீட்டிற்கு வந்து தடுப்பூசி, மருத்துவ ஆலோசனை வழங்கிவருவது வழக்கம். அதன்படி செவிலியர் அமரா, நேற்று நாகலட்சுமி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அருகில் இருந்தவரிடம் விசாரித்துள்ளார். அப்போது கணவன் மணிகண்டபிரபுக்கும் - நாகலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மணிகண்டபிரபு குழந்தையை கொலை செய்து அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.