திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை, மணக்காட்டூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி கோசுகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தாண்டு பருவமழை பெய்யாமல்போனதால் பயறு வகைகள், தானியங்கள் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காமல் போய்விட்டது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் விளைச்சல் நன்றாக இருந்தாலும், அதற்கான விலை கிடைக்கவில்லை.
இதுகுறித்து கருத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், "இந்த வருடம் எதிர்பார்த்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. இதனால் விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.