தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீதி பணத்தோடு கடையில் பொருட்களை வாங்கி வரும் 'ஜாக் ஸ்பேரோ' நாய் - etv bharat

பழனியில் ஜாக் ஸ்பேரோ என்ற நாய்‌ உரிமையாளரின் வீட்டிற்குத் தேவையான பொருட்களை‌ கடைகளுக்கு சென்று வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேக் ஸ்பேரோ நாய்
ஜேக் ஸ்பேரோ நாய்

By

Published : Aug 4, 2021, 9:34 PM IST

Updated : Aug 4, 2021, 11:04 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் தாஸ் ஃபெர்னாண்டஸ் (54). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டில் லேபர்டர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நான்கு வயதான அந்த நாய்க்கு 'ஜாக் ஸ்பேரோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் சேவகன்

உரிமையாளர் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஜாக் ஸ்பேரோ கடைக்குச் சென்று வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

ஜாக் ஸ்பேரோ நாய்

உரிமையாளர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பால், சிக்கன், மட்டன் ஆகியவற்றை ஒரு சீட்டில் எழுதி பணத்தோடு ஒரு கூடையில் வைத்து நாயிடம் கொடுக்கிறார். பின்னர் கடைக்குச் சென்று சரியான பொருட்கள் மற்றும் மீதி பணத்தையும் நாய் வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக் ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக தினமும் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரும் நாய், வியாபாரிகள் மற்றும்‌ பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக மாறிவருகிறது.

இதையும் படிங்க:விஜய்யின் வழியில் தனுஷ்... கார் நுழைவு வரி வழக்கு விசாரணை

Last Updated : Aug 4, 2021, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details