திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்பகுதி மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராமங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் இன்று (நவ.16) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், எவ்வாறாக பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், ‘வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைய பல்வேறு வேலைகள் செய்ய வேண்டும். கழக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாளன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிட வேண்டும்.