தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2020, 7:18 PM IST

ETV Bharat / state

மளிகைக் கடையில் ரூ.6 ஆயிரம் திருட்டு!

திண்டுக்கல்: மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து ரூ.6 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மளிகை கடையில் திருட்டு
மளிகை கடையில் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியில் ரகுபதி என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடை உள்ளது. நேற்று (செப். 29) இரவு வழக்கம்போல் அவர் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இன்று (செப். 30) காலை மீண்டும் ரகுபதி கடையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரையைப் பிரித்து அடையாளம் தெரியாத நபர் கடையிலிருந்த எல்.இ.டி. டி.வி., கல்லா பெட்டியில் வைத்திருந்த ஆறாயிரம் ரூபாய், உண்டியல் பணம், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றைத் திருடிச்சென்றது தெரியவந்தது.

மளிகைக் கடையில் திருட்டு

இது குறித்து பழனி நகர காவல் துறையினரிடம் அவர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

அதில் முகமூடி அணிந்துவந்த நபர் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. தற்போது காவல் துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து திருடிச் சென்ற நபரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி- திருடனுக்கு தர்ம அடி!

ABOUT THE AUTHOR

...view details