பழனியை அடுத்து கொழுமங்கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாகவும், கிணற்று பாசனத்தின் மூலமாகவும் கொழுமங்கொண்டான் கிராமத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
கிராமத்தில் மயில்கள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். இந்நிலையில் இங்குள்ள கரிசல் குளப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாமிநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.