திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று காரணமாக பல பகுதிகளில் கிராம இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் யாரும் வரவேண்டாம் என தடுப்பு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற மதவழிபாட்டில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஐவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள சம்சுதீன் காலனியில் மூன்று பேரும், மாணிக்கம் பிள்ளை பேட்டையில் இரண்டு பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.