திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக்கிழமையன்று மருந்து விற்பனையாளர் விஜய் என்பவர் தேனி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநருக்கும், விஜய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்துல் இருந்து கீழே இறங்கிய விஜய் மீது அங்கிருந்த அரசு பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த விஜய், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் கொடுத்த புகாரின் பேரில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் தினகரன், மணிகண்டன் மற்றும் நடத்துநர் அலெக்ஸ் உட்பட ஏழு பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.