திண்டுக்கல்: பேகம்பூர் டி.வி.ஏ. நகரைச் சேர்ந்தவர் முகமது இஸ்ஸாக். இவரது மனைவி பஷீலா செரீன். பல் மருத்துவராக உள்ளார். இவர்களது இரண்டரை வயது மகன் முகம்மது சப்ராஸ். சிறுவன் சின்னஞ்சிறு வயதில் மழலை மொழியில் பேசியது அனைவரையும் மயங்க வைத்தது.
அதுமட்டுமல்லாமல் ஐந்து நிமிடத்தில் 14 ரைம்ஸ் மடமடவென பாடியது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்தது. இதையடுத்து சிறுவன் பாடிய பாடல்கள் ரெக்கார்டு செய்து சாதனை அமைப்புகளான நோபில்புக் ஆஃப் வேர்ல்டு ரிக்கார்டு, கலாம்ஸ் வேர்ல்டு ரிக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சாதனை நிறுவனங்கள் சிறுவனின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழும் பாராட்டும் தெரிவித்துள்ளன. சிறுவனின் தாய் பஷீலா செரீன் கூறியதாவது, “எனது மகன் ஒரு வயதாகும்போது துருதுருவென்று ஏதாவது ஒரு பாடலை பாடிக் கொண்டே இருப்பான்.