வடமதுரை நிலப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவி திவ்யபாரதி ஆவார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆயிற்று. இந்தத் தம்பதியினருக்கு சுதீஸ்(5), சுவேதா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் திவ்யபாரதி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.