திண்டுக்கல்:வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை தேர்வு செய்து, அவரை இரவு முழுவதும் நிலா பெண் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் - மேகலா தம்பதியின் மகள் சர்வ அதிர்ஷ்டா (10) என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை அங்குள்ள மாடச்சி அம்மன் கோயிலில் இருந்து தாரை - தப்பட்டை முழங்க, சரளை மேடுக்கு கிராமப் பெண்கள் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆவாரம் பூ மாலையிட்டு, ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து, மாரியம்மன் கோயில் முன்பு அமர வைத்தனர். பின்னர் பெண்கள் பாட்டுப் பாடி கும்மியடித்து மகிழ்ந்தனர்.