திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புரெவி புயல் காரணமாக காற்றுடன்கூடிய மழை பெய்ததால் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நகப் பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானல் சாலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடைசெய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கொடைக்கானல் நுழைவு வாயிலான காமக்காபட்டி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.