திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் அதிகம் வெளியே வருவதில்லை. இந்நிலையில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்க தினமும் தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் தங்களது தூய்மைப் பணியில் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
அந்தவகையில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தினசரி சேரக்கூடிய குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்திவருகின்றனர். மேலும் சாக்கடை அடைப்புகளை அதிகளவில் மக்கள் கூடும் பகுதிகளில் இருந்தது. அந்த இடங்களில் பணி செய்யமுடியாத நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் அடைப்புகள் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.