தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு அதிகளவில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 7ஆவது வார்டு வினோபா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு, அவரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின் சோதனையின் முடிவில் அந்த நபருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,