தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2020, 4:04 AM IST

ETV Bharat / state

கரோனா நிவாரணமாக ரூ.7500 வழங்க சிபிஎம் கோரிக்கை!

திண்டுக்கல்: கரோனா கால நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றியச் செயலாளர் தா. அஜய்கோஷ் தலைமை வகித்தார். ஒன்றியக்கவுன்சிலர் செல்வநாயகம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோரிக்கை மனுக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details