கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 89 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 49 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கரோனா பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அனைவரும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.