திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்துவந்தது. கடந்த இரண்டு நாள்களாக மிதமான மழையும் பெய்துவருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கொடைக்கானலில் இன்று (நவ. 17) காலை லேசான மழை பெய்யத்தொடங்கியது. பிறகு ஏரிசாலை, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், அண்ணாசாலை, பேருந்து நிலைய பகுதி, தெரசாநகர், பள்ளங்கி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.