தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாகக் கடை வீதியில் திரண்ட பொதுமக்கள் - CORONAVIRUS, IMPACTS, PRECAUTIONS

திண்டுக்கல்: செந்துறை பகுதியில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வீதியில் திரண்டதால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

senthurai
senthurai

By

Published : Apr 6, 2020, 11:41 PM IST

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் இதுவரை 3,37 பேர் பாதிக்கப்பட்டும், 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஆட்கொல்லி நோயான கரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வந்து செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. தனிமனித ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பஜாருக்கு வந்த மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு இருப்பதுபோல் எந்தச் சுவடும் இன்றி சாதாரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசின் உத்தரவை மீறி கொல்லுப் பட்டறைகள், டீ கடைகள், பலகாரக் கடைகள், பெட்டிக்கடைகளில் வியாபாரம் படுஜோராக நடைபெறுகிறது.

கரோனா அபாயம் தெரியாமல் சுற்றித் திரியும் மக்கள்

சுகாதாரமற்ற முறையில், சமூக இடைவெளி இல்லாமல் இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், சரக்கு வண்டியில் காய்கறி விற்பனை, பழங்கள் விற்பனை, வாழைப் பழக் கடைகளில் ஏகபோகமாக விற்பனையாகிறது. செந்துறை பகுதியில் காவலர்கள் எப்போதாவது ஒருமுறை வருவதால், நோய்த் தொற்றின் அச்சம் தெரியாமல் மக்கள் கூட்டமாய் அலைமோதுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே காவல் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தீப்பற்றக்கூடியதா ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள், சானிடைசர்?

ABOUT THE AUTHOR

...view details