தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2022, 5:22 PM IST

ETV Bharat / state

சிசிடிவி: நள்ளிரவில் பெட்ரோல் திருடும் கும்பல்

நத்தம் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் நள்ளிரவில் பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்களை திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பெட்ரோல் திருடும் கும்பல்
பெட்ரோல் திருடும் கும்பல்

திண்டுக்கல்: நத்தம் அசோக் நகரில் ராஜசேகரன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் உதிரிபாகங்களை திருடி சென்றனர்.

இதன் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பெட்ரோல் திருடும் கும்பல்

மேலும் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details