ஆந்திராவிலிருந்து பழனிக்கு கஞ்சா கடத்திவருவதாக பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தாலுகா சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தலைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவா உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த மதுரையைச் சேர்ந்த தங்கவேல் (42), வினோத்ராஜ் (30) ஆகியோரை விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலத்திலிருந்து திருப்பூருக்குப் பருத்தி லோடு ஏற்றிச் சென்றபோது, காக்கிநாடா அருகில் உள்ள துணி என்ற ஊரில் லாரியை நிறுத்தி பழனியை விஜயானந்த் (42), சிரஞ்சிவி (36), ராஜ்குமார் (36) ஆகியோருடன் இணைந்து கஞ்சாவை லாரியில் கடத்திவந்து பழனியில் ஒப்படைக்க இருந்தது தெரியவந்தது.