திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவுக்காக நகர்ப்பகுதிக்குள் வலம்வருகின்றன. மேலும், இவ்வாறாக வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் பொதுமக்களையும் தாக்கிவருகிறது.
இந்நிலையில் நேற்று(ஏப். 12) கொடைக்கானல் ஃபரன்ஹில் சாலைப் பகுதியில் வனப்பகுதிக்குள்ளிருந்து வந்த ஒற்றை காட்டெருமை சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் நெகிழிக் குப்பைகளை உண்டது.