திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே அரசு தொழிற்பேட்டை இயங்கிவருகிறது. இங்கு வீராசாமி என்பவர் 144 தடை உத்தரவை மீறி தனது தொழிற்சாலையை இயக்கிவருவதாக திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர், வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள், நிறுவனத்தை சோதனை செய்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழிப் பொருள்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.