திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் ரவுண்டானா அருகே திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் அபுதல்ஹா ஆகியோர் முன்னிலையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எமதர்மா ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடக நிகழ்ச்சி மூலம் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு! - கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு
திண்டுக்கல்: மாவட்ட காவல்துறையினர் நாடக நிகழ்ச்சி மூலம் கரோனா தொற்று குறித்து நேற்று (ஏப்.22) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாடக நிகழ்ச்சி மூலம் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு!
இதில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி இலவச முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க:நடுக்கடலில் சிக்கித் தவித்த எட்டு இந்திய மீனவர்கள் மீட்பு!