தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2022, 4:37 PM IST

Updated : Jul 6, 2022, 5:33 PM IST

ETV Bharat / state

அவகோடா மரங்களை சேதப்படுத்தி வரும் கம்பளி பூச்சி

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அவகோடா மரங்கள் மற்றும் செடிகளை கேட்டர் பில்லர் எனப்படும் ராட்சச கம்பளி பூச்சி இனங்கள் கடித்து சேதப்படுத்தி வருகிறது.

அவகோடா மரங்களை சேதப்படுத்தி வரும் கம்பளி பூச்சி
அவகோடா மரங்களை சேதப்படுத்தி வரும் கம்பளி பூச்சி

திண்டுக்கல்:கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வில்பட்டி, அட்டுவம்பட்டி ,பள்ளங்கி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் அவக்கோடா விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் அவகோடா சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தொடர்ந்து பலவேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோவிற்கு 150 முதல் விற்பனையாகிறது. இந்த சூழலில் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அவகோடா மரங்கள் மற்றும் செடிகளை கேட்டர் பில்லர் எனப்படும் ராட்சச கம்பளி பூச்சி இனங்கள் கடித்து சேதப்படுத்தி வருகிறது.

அவகோடா மரங்களை கேட்டர் பில்லர் ராட்சச பூச்சிகள் கடித்ததால் தேசம்..!

இதனால் அவகோடா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை பூச்சிகள் தொடர்ந்து விவசாயத்தை சேதப்படுத்தி வருவது குறிப்பிடதக்கது. எனவே கேட்டர் பில்லர் எனப்படும் ராட்சச கம்பளி பூச்சி இனங்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:Sandalwood: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

Last Updated : Jul 6, 2022, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details