திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாகவே பகல் இரவு நேரங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தொடர் மழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் மலை கிராமமான பூம்பாறை ,மன்னவனூர், கிளாவரை, பகுதிகளில் விவசாயம் செய்துள்ள கேரட், பூண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் மழையில் அழுகி சேதமடைந்து வருகிறது.