தமிழ்நாடு

tamil nadu

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய காவல் ஆய்வாளர்

By

Published : May 9, 2020, 11:17 AM IST

திண்டுக்கல்: விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

police
police

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதியில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துவரங்குறிச்சி கிடாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், சிவராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய காவல் ஆய்வாளர்

எதிர்பாராத விதமாக மங்களாம்பட்டி அருகே வந்தபோது பனைமரத்தில் மோதி சாலையில் விழுந்து கிடந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த ராஜமுரளி காயமடைந்த இருவரையும் தனது ஜீப்பில் ஏற்றி செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மனித நேயத்துடன் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details