திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டெருமை, பன்றி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான செட்டியார் பூங்கா அருகே சுகந்தி என்பவர் தனது வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இரவு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்ட ஆடுகளை மறுநாள் காலை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.