திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆத்தூர், காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமரநாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் சின்னச்சாமி, மல்லப்புரம் என்ற இருவர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.10) இரவு 9 மணியளவில் அமரநாதன் மற்றும் சின்னச்சாமி தோட்டத்தில் காவலுக்கு இருந்துள்ளனர். அப்போது சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் (19), வாஞ்சிநாதன் (20), முத்தையா (60), மார்க்கண்டன் (55), பைரவன் (19), லெட்சுமணன் (21) ஆகிய ஆறு பேரும் கையில் டார்ச் லைட்டுடன் சுற்றித் திரிந்துள்ளனர்.