திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மது விலக்கு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மது விற்பனை செய்த எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 1300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.