திண்டுக்கல்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வியாபாரி கிருஷ்ணன்(50). இவர் ஆட்டுக்கு மருந்து வாங்க திண்டுக்கல் சென்றுவிட்டு மீண்டும் வேடசந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, காக்கா தோப்பு பிரிவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அவருக்கு பின்னந்தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர் லோகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.