தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விதிமுறைகளை மீறிய இளைஞர்கள் - காவல் துறையினர் எச்சரிக்கை! - lock down

கரோனா ஊரடங்கு தர்மபுரி நகர பகுதிகளில் கரோனா விதிமுறைகளை மீறி இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவதால் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறிய இளைஞா்கள்
விதிமுறைகளை மீறிய இளைஞா்கள்

By

Published : May 10, 2021, 2:50 PM IST

தர்மபுரி: கரோனா பரவல் காரணமாக இன்று (மே 10) முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அரூர், பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று (மே 9) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருந்தகம், பாலகம், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர்த்து ஏனைய கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்களின் நடமாட்டம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது. முழு ஊரடங்கு கடைப்பிடிக்காமல் சில இளைஞா்கள் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றி திரிகின்றனா். இதுபற்றி, நகர காவல் துறையினர் இளைஞர்களை பிடித்து தணிக்கை செய்து, எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

இதையும் படிங்க: சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details