தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனது தாய் தொட்டியம்மாளுடன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், "எனது தாய் தொட்டியம்மாளுடன் நான் வசித்துவருகிறேன். தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தனக்கு திருமணம் செய்துவைக்க தாய் தொட்டியம்மாள் ஏற்பாடு செய்தார்.
நான் படித்துவிட்டு வேலைக்குச் சென்ற பிறகு திருமணம் செய்துகொள்வதாக கூறினேன். அந்த நிலையில் எனது தாய் தொட்டியம்மாள் கடைமடை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், கரகத அள்ளி ஊராட்சி தலைவர் முத்துவேல் என்பவர் மூலமாக கடைமடை கிராமத்திலுள்ள சண்முகம் - சின்னம்மாள் ஆகியோரின் மகன் சக்திவேலுக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர்.