ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ் பாபு இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அலுவலர்களின் செயல்பாடுகளைக் கேட்ட பின்னர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுத் துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு, ‘பருவமழை குறைவு காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களிலும் உள்ளது. முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களைக் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.