தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு - ஒகேனக்கல் நீர்மட்டம்
தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல்
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து தற்போது பெய்துவரும் மழை காரணமாக இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்தது.