தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த வெங்கடதார அள்ளி மக்கள்! - dharmapuri local body election

தருமபுரி: கடத்தூர் அருகேயுள்ள வெங்கடதார அள்ளி கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

local body election
local body election

By

Published : Dec 27, 2019, 12:32 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடதார அள்ளி பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெங்கடதாரா அள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜிவ் காந்தி என்பவர் வெங்கடதாரா அள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தேர்தலை புறக்கணித்த மக்கள்

இவர்கள் இருவரும் தேர்தல் பரப்புரைக்கு புதூர் பகுதிக்கு செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்காத காரணத்தால் இன்று வெங்கட்ட தாராவி பகுதியை சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவரும் வெங்கடதார அள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

வெங்கடதார அள்ளி பகுதியில் 352 வாக்காளர்கள் உள்ளனர். வெங்கட்ட தாராபுதூர் பகுதியில் 702 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் உள்ள பகுதியைச் சேர்ந்த ராஜிவ் காந்தியை 702 கொண்ட புதூர் பகுதியில் வாக்கு சேகரிக்க விடாததால் வெங்கடதார அள்ளி பொதுமக்கள் தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு செய்வதையறிந்த வட்டாட்சியர் ஊர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பை ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் புறக்கணிப்பை தொடர்ந்து வெங்கட்டதார அள்ளி புதூர் பகுதியில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details