தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரைப்பட்டி கிராமத்தில், போக்குவரத்து துறை சார்பில் ஒரு கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.
வாகன ஆய்வாளர் அலுவலர் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் இதன்மூலம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய வட்டங்களில் உள்ள 846 கிராமங்களைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சத்து 40 ஆயிரம் பேர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பணிகளை சிரமமின்றி பெற்றுப் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் தென்காசி சு. ஜவஹர் ஆகியோரும் இன்ன பிற அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.