தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திருமலை வாடி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் விவசாயம் செய்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஏப். 27) அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் அதிசய சொம்பு ஒன்று உள்ளது. அந்த சொம்பு அருகே டார்ச் லைட் ஆன் செய்துகொண்டு சென்றால் தானாக லைட் அணைந்து விடும்.
ஒரு சொம்பு 1.5 லட்சம்
எனவே, அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதனை ஆர்வமுடன் பார்க்க தனது நண்பர்களான முனிரத்தினம், சென்றாயன் ஆகியோர்களுடன் ராமச்சந்திரன் கார் மூலம் கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். வரும் வழியில் டி.ஜி.புதூரில் அவர்களுக்குத் தெரிந்த சிவாஜி என்பவரும் இவர்களுடன் காரில் சென்றுள்ளார். கணேசன் இவர்களைக் கண்டதும் சொம்பைக் காட்டி ஒரு லட்சத்து, 50ஆயிரம் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்.