தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கிவைத்தார்.
நடப்பாண்டில் அரவை ஆலையில் நடைபெறுவதற்கு, 3 ஆயிரத்து 283 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலையில் 1,28,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து 30,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை பெறப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதல் வாரம் வரை 70 நாள்கள் நடைபெறும்.