தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2019, 6:17 PM IST

ETV Bharat / state

ரூ. 28 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

தருமபுரி: ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு சென்ற 28 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அரசு வங்கிக்கு சொந்தமான ரூ. 28லட்சம் பறிமுதல்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கொடிபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு பணம்நிரப்ப எடுத்துச் சென்ற வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 28 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அரசு வங்கிக்கு சொந்தமான ரூ. 28லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை

மேலும் விசாரணையில் பிடிபட்ட 28 லட்சம் ரூபாய் பணம் தருமபுரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சொந்தமானது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details