தமிழ்நாடு காவல் நிலையங்களுக்குக் காவல் துறை சார்பில் ரகசிய கேமராக்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு கேமராக்கள் வழங்க முடிவுசெய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 15 காவல் நிலையத்திலுள்ள காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேற்று (மார்ச் 3) கேமராக்களை வழங்கினார்.
கேமராவைப் பயன்படுத்தும் 15 காவல் துறையினருக்கும் ஏற்கெனவே கேமராவை கையாளுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தோள்பட்டையில் பொருத்தப்படும் இந்தக் கேமரா ஆர்ப்பாட்டம், கலவரம், போராட்டம் ஆகிய நிகழ்வுகளைப் பதிவுசெய்ய பயன்படுகிறது.