ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்த காவல் துறை - கள்ளசாரயாம்

தர்மபுரி: கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Apr 8, 2020, 3:47 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகளை அரசு மூடியுள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுபானம் கிடைக்காத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிலர் தங்கள் விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தருமபுரி மதுவிலக்கு பிரிவுக்கு தகவல் வந்தது. இந்தத் தகவலையடுத்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர், பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அனுமந்தபுரம் மூசன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஞான சந்திரன் என்பவர் தனது விவசாய நிலத்தில் 100 லிட்டர் கொள்ளளவு சாராய ஊறல் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், ஆறுமுகம் ஆகியோரின் வீட்டில் 5 லிட்டர் சாராயத்தை காவல் துறையினர் கைப்பற்றி அவர்களையும் கைது செய்தனர்.

இதனையடுத்து பாலக்கோட்டையடுத்து மாக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவரது வீட்டிலும் சாராயம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details