குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பேனர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்தப் பேனரில் 'குடியுரிமை மசோதா மூலம் சிறுபாண்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு மண்ணிக்க முடியாத துரோகம் செய்யும் மத்திய பாஜக - அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' என அச்சிடப்பட்டிருந்தது.
சிறுபான்மையினர் இரண்டு சுழி(ன்)க்கு பதிலாக 'சிறுபாண்மையினர்' என்றும், மன்னிக்க என்ற சொல்லில் இரண்டு சுழி (ன்)க்கு பதிலாக 'மண்ணிக்க' என எழுத்துப் பிழையோடுப் பதிவு செய்யப்பட்டிருந்தது.