முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி ஆர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜிகே மணி தொண்டர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை கொச்சைப்படுத்தும் வகையில், நாகரீகமற்று பேசுவதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ராசா எங்கிருந்து வந்தார்? எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சர், அவர் தாயார் குறித்து பேசுவதற்கு ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?. இது வரம்பு மீறிய பேச்சு” என்றார்.