தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து ஒரு கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த பாலக்கோட்டை அடுத்து வெள்ளி சந்தையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அப்பு (எ) முனியப்பன் (26) தனது இரு சக்கர வாகனத்தில் மாணவியை ’வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என அழைத்துள்ளார்.
மாணவி மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒதுக்குபுறமாக உள்ள சோழக்காட்டு பகுதிக்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய தூக்கிச் சென்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற இளைஞர்கள், மாணவியை மீட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த நபரை பிடித்தனர்.