கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. இன்று (ஏப்.17) நீர்வரத்து திடீரென உயர்ந்து 3 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் நேற்று (ஏப்.16) மாலையே குவியத் தொடங்கினர்.